இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத்- காஞ்சிபுரம் சாலை இங்கு முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகின்றன. ஏற்கனவே இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன இவை மட்டும் இன்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்சுகளும் இந்த சாலை வழியாகத்தான் நாள்தோறும் சென்று வருகின்றன. இந்நிலையில், இதுபோன்ற சாலை அமைக்கும் பணியை இரவு நேரங்களில் செய்தால் யாருக்கும் எந்த பிரச்னையும் இன்றி போக்குவரத்து நெரிசலும் இன்றி வாகனங்கள் சென்றுவரும் இது போன்ற பணியை நேற்று திடீரென மதியம் தொடங்கியதால் தொழிற்சாலைகளுக்கு சொல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகளும் மற்றும் பல்வேறு கிராமப்புற நகர்ப்புற பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகளும் நெரிசலில் சிக்கி தவித்தன. இதனால், 5 கிலோ மீட்டர்களுக்கும் மேல் மக்கள் நடைபயணமாக சென்ற அவல நிலையும் இப்பகுதியில் தொடர்ந்தன. இது போன்ற நேரங்களில் போக்குவரத்திற்கும், மக்களுக்கும் எந்தவித பிரச்னையும் இன்றி பணி செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
The post காஞ்சி- செங்கை இடையே முத்தியால்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.