கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல்?: ஆவின் மறுப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் புதிதாக பால் கொள்முதலை தொடங்கவில்லை என்று ஆவின் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். போச்சம்பள்ளியில் அமுல் நிறுவனம் பால் கொள்முதலை தொடங்கி உள்ளதாக வெளியான தகவலுக்கு ஆவின் மறுப்பு தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அமுல் நிறுவனம் கிருஷ்ணகிரியில் வாடகை கட்டடத்தில் பால் குளிரூட்டும் நிலையத்தை அமைத்தது. தற்போது வரை பால் பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பான எந்த மையத்தையும் அமுல் நிறுவனம் அமைக்கவில்லை.

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல்?: ஆவின் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: