உள்நாட்டு பாதுகாப்பு அமித்ஷா ஆலோசனை

புதுடெல்லி: உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதம், போதைப்பொருள் நிதி, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 750 பேர் கலந்து கொண்ட 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் அமித்ஷா உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அமித்ஷா, ‘பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு, தேசிய பாதுகாப்பின் அனைத்து அம்சங்களையும் பலப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான தேசத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. பாதுகாப்பு பிரச்சினைகளைத் தவிர, போதைப்பொருள் கடத்தல் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

The post உள்நாட்டு பாதுகாப்பு அமித்ஷா ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: