தற்போது நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி அமைச்சர் உதயநிதி அறிவித்த போராட்டம் தான் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இது முதல் கட்டம் தான். தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வு தடை விதிக்கும் வரை இந்த போராட்டம் நடைபெறும், என்றார். கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் பேசுகையில், நீட் தேர்வால் பல உயிர்களை காவு கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல், தான் தோன்றித்தனமாக செயல்படுகிறது. இன்றைய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக உள்ளது. எனவே இந்த நீட் தேர்வை ரத்து செய்ய திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. எனவே திமுகவை சேர்ந்த இளைஞர் அணியினர் மற்றும் மாணவர் அணியினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கட்டுக்கோப்பாக நடந்து கொண்டு தொடர்ந்து தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்த வேண்டும், என்றார். உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டமன்ற தீர்மானத்தை நீண்ட காலமாக கிடப்பில் போட்டுவிட்டு தற்போது கவர்னர் மீண்டும் அதை சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். உலகத்திலேயே காலை உணவு திட்டத்தை முதலில் கொண்டு வந்து செயல்படுத்தியவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். எதிர்க்கட்சிகளால் கொடுக்க முடியாது என்று கூறப்பட்ட மகளிர் உரிமை தொகை சாதாரண ஏழை குடும்பங்கள் அனைவருக்கும் வழங்கப்படும், என்றார்.
The post நீட் தேர்வு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்: அமைச்சர்கள் ஆவேசம் appeared first on Dinakaran.