நோபிள் மகளிர் கல்லூரியில் அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் துவக்க விழா

விருதுநகர், ஆக.19: விருதுநகர் நோபிள் மகளிர் கல்லூரியில் மாணவியரின் அரசு வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ஆர்ஆர்பி, ஐபிபிஎஸ் மற்றும் எஸ்எஸ்சி ஆகிய போட்டி தேர்வுகளுக்கான நோபிள் போட்டி தேர்வு பயிற்சி மையத்தின் தொடக்கவிழா கல்லூரி நிறுவனர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலர் வெர்ஜின் இனிகோ தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் வேல்மணி தலைமை உரையாற்றினார். துணைமுதல்வர் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் மாரிமுத்து, மாணவர் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை விளக்கினார். மேலும் மாணவிகளின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக மாற்ற உதவும் என்றார். பேராசிரியர்கள் தங்கராஜ், மகேஸ்பிரியா உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.

The post நோபிள் மகளிர் கல்லூரியில் அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: