முல்லைப் பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வைத் தொடங்கினர்..!!

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வைத் தொடங்கினர். 3 மாதங்களுக்கு பின் ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணையின் பிரதான அணை, பேபி அணை மதகுப்பகுதிகள், சுரங்கப்பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர். பருவமழை காலங்களில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு நடக்கிறது. தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயற் பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் குமார் ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

The post முல்லைப் பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வைத் தொடங்கினர்..!! appeared first on Dinakaran.

Related Stories: