அதாவது, திருவிழாவின் போது திருடும் நபர், திருடன், திருடன் எனக் கூறிக்கொண்டே ஓட்டம் பிடிப்பார். அதுபோலவே, பாஜவினர் செயல்படுகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் தனி அரசியல் செய்து, ஆளுநர் மாளிகையை பாஜ அலுவலகமாக மாற்றி வருகிறார். எக்காரணத்தை கொண்டும் நீட் விலக்கிற்கு கையெழுத்து போட மாட்டேன் என கூறி இருக்கிறார். தனியார் நீட் கோச்சிங் சென்டர்கள், மாணவர்களிடம் பல லட்சம் கொள்ளை அடிக்கிறது.
ஆளுநருக்கு சில தனியார் கோச்சிங் சென்டர்கள் பினாமியாக இருப்பதாக சொல்கிறார்கள். அண்ணாமலை செல்வது பாத யாத்திரை அல்ல. பாதியில் நின்று போன யாத்திரை. இதனால் அவர்களின் கட்சிக்கோ, மக்களுக்கோ எந்த பலனுமில்லை. வேண்டுமென்றால் மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று, அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் என அவர் பாதயாத்திரை நடத்தினால் நன்றாக இருக்கும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.
The post விரைவுச்சாலை திட்டத்தில் ரூ.6,758 கோடி ஊழல் பாஜவினர் திருவிழா திருடர்கள்: முத்தரசன் கடும் தாக்கு appeared first on Dinakaran.