அந்த 5 மாணவர்களை பள்ளி நிர்வாகம் மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர்களது பெற்றோருக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், மேலும் பெற்றோர்களிடம் இந்த சம்பவத்தை யாரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பின் பள்ளி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தின் வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் குன்றத்தூர்-போரூர் சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
The post காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 5 மாணவர்கள் காயம்: பெற்றோர்கள் போராட்டம் appeared first on Dinakaran.