இதுகுறித்து முகமது தமீம் ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் (எ) கருக்கா வெங்கடேஷ் (35) மற்றும் கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகரைச் சேர்ந்த கருணா (எ) கொசு கருணா (26) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ராயபுரம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று 2 பேரையும் கைது செய்தனர். 2 பேரையும் கைது செய்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர். அவர்களை சிறையில் அடைத்தனர்.
The post ரூ.8.5 லட்சம் வழிப்பறி; 2 பேர் கைது appeared first on Dinakaran.