இது தொடர்பாக பறக்கும் படை சார்பில் ஆர்.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பாண்டியராஜன் மற்றும் ஓ.பி.எஸ் ஆதவாளரான டாக்டர் அழகு தமிழ்செல்வி ஆகியோர் மீது தேசிய கொடியை அவமதித்ததாக 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாண்டியராஜனுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பாண்டியராஜன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பாண்டியராஜன் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
The post பிரசாரத்தின்போது தேசியக்கொடி அவமதிப்பு முன்னாள் எம்எல்ஏ பாண்டியராஜன் மீதான வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் appeared first on Dinakaran.