தேவகோட்டை ரஸ்தாவில் லீஃபி டீ கம்பெனி நாளை திறப்பு

தேவகோட்டை, ஆக.2: தேவகோட்டை ரஸ்தா மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் லீஃபி டீ கம்பெனி நாளை(3ம் தேதி) ஆடிப்பெருக்கு நாளில் திறக்கப்படுகிறது. ஏற்றுமதி தரத்தில் சொந்தமாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். லீஃபி டீ கம்பெனியின் பிரமாண்டமான திறப்பு விழாவிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகிக்கிறார். காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ.மாங்குடி, முன்னாள் அமைச்சரும், திமுக மாநில இலக்கிய அணித்தலைவர் மு.தென்னவன், திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, சிவகங்கை சிட்கோ கிளை மேலாளர் ஆர்.கலாவதி மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை லீஃபி டீ கம்பெனி மானேஜிங் டைரக்டர் ஆர்.ஏ.சேவியர், லீஃபி இம்போர்ட்ஸ் அன் எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாகி ஏ.ஆண்டோமைக்கில் செய்து வருகின்றனர்.

The post தேவகோட்டை ரஸ்தாவில் லீஃபி டீ கம்பெனி நாளை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: