அண்ணாமலை செல்வது சொகுசு யாத்திரை ஒன்றிய பாஜ அரசின் ஆட்சியில் ரூ.35 லட்சம் கோடி கொள்ளை: காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் பேட்டி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுகிறேன் என்று சொன்னதற்கான வீடியோ எங்களிடம் உள்ளது. ஆனால் பாஜ தலைவர்களோ, அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். மன்னிப்பு கேட்க வேண்டியது எல்லாம் பாஜ தலைவர்கள் தான். மோடி 2013 நவம்பர் 7ம் தேதி பேசிய ஆடியோ திரையிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக பாஜ ஆட்சி செய்தும் இதுவரை கருப்பு பணத்தை அவர்களால் மீட்க முடியவில்லை. ஆகையால் இவர்கள் பொதுவெளியில் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், நவீன முறையில் ரூ.35 லட்சம் கோடியை மக்களிடம் இருந்து கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதனால் மக்களிடம் அவர்கள் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். அண்ணாமலை பாதயாத்திரை என்று சொல்லிக் கொண்டு சொகுசு யாத்திரையை நடத்துகிறார். 3 நாட்களாக வெறும் 8கிலோமீட்டர் மட்டுமே சென்றுள்ளார். சினிமா பாடல் காட்சியில் வருவது போன்று அவர் சொகுசாக பயணம் செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணாமலை செல்வது சொகுசு யாத்திரை ஒன்றிய பாஜ அரசின் ஆட்சியில் ரூ.35 லட்சம் கோடி கொள்ளை: காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: