இந்த நிலையில், சுப்பையா மற்றும் மண்டல் தலைவர் ஜவகர், ஆம்ஸ்ட்ராங் மற்றும் சுப்பையாவின் சகோதரி மகன் முத்தரசன் ஆகியோர் சென்று சென்னை கிழக்கு மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் வி.ராஜேஷ் என்பவரை நங்கநல்லூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து தகாதவார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள், ‘’நாங்கள் மது அருந்துவது போன்ற வீடியோக்கள் நீ கொடுத்துதான் சமூகவலை தளத்தில் வெளிவந்து உள்ளது’’ என்று கூறி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடியபோது அவரது சட்டையை கிழித்து மேலும் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து ராஜேஷ் கொடுத்துள்ள புகாரின்படி, பழவந்தாங்கல் போலீசார் வந்து விசாரித்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரிக்கின்றனர்.
The post மது அருந்தும் வீடியோ வைரல் எதிரொலி; பாஜக நிர்வாகிகள் கோஷ்டி மோதல்; ஐடி பிரிவு செயலாளர் மீது தாக்குதல்: சட்டையை கிழித்து ஓடவிட்டனர் appeared first on Dinakaran.