ஹரியானா: ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியில் இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல் வெடித்தது. மேவாட் பகுதியில் நடந்த விஷ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதில் பலர் காயம் அடைந்துள்ளனர். கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் பேரணியில் பங்கேற்றவர்களில் பலர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.