கும்பகோணம் அடுத்த உத்தாணி முத்து முனியாண்டவர் கோயில் திருவிழா

 

கும்பகோணம், ஜூலை 31: கும்பகோணம் அருகே உத்தாணி முத்து முனியாண்டவர் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உத்தாணி கிராமத்தில் அமைந்துள்ள முத்து முனியாண்டவர் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முதல் நாள் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் பரிவார ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் ஊருணி பொங்கல் தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மூன்றாம் நாள் உத்தாணி குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலங்கார காவடிகள் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

The post கும்பகோணம் அடுத்த உத்தாணி முத்து முனியாண்டவர் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: