மின்கம்பத்தில் மோதி கடைக்குள் புகுந்த லாரி

அந்தியூர்,ஜூலை 28: அந்தியூரிலுள்ள பொறிக்கடை கார்னர் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஆந்திராவில் இருந்து கோவைக்கு சிலிக்கான் மண் ஏற்றிச் சென்ற கனரக லாரி வந்து கொண்டிருந்தது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் லாரி மோதி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி அங்கிருந்த பிவிசி டோர் கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வேலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் துரைராஜ் எந்த காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தூக்க கலக்கத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே மின்கம்பத்தில் மோதியதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் சென்றதன் காரணமாக அப்பகுதியில் சிறிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

The post மின்கம்பத்தில் மோதி கடைக்குள் புகுந்த லாரி appeared first on Dinakaran.

Related Stories: