‘டோக்சுரி’ புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிலிப்பைன்ஸ்.. சூறாவளி காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சேதம்!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டில் வட பகுதியை டோக்சுரி என பெயரிப்பட்டு இருக்கும் புயல் கடுமையாக தாக்கியதில் க்ளவேரியா, பகரா மற்றும் போன்டோக் மாகாணங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். மணிக்கு 175 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

The post ‘டோக்சுரி’ புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிலிப்பைன்ஸ்.. சூறாவளி காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சேதம்!! appeared first on Dinakaran.

Related Stories: