60 அடி கிணற்றில் தவறி விழுந்து போராடிய முதியவர் 3 நாளுக்கு பின் மீட்பு

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே நம்பியூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (65). கூலித்தொழிலாளி. இவர் ரங்கநாதபுரம் என்ற இடத்தில் உள்ள 60 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். கடந்த 23ம் தேதி முதல் நேற்று மதியம் வரை 3 நாட்களாக கிணற்றுக்குள்ளேயே கிடந்துள்ளார். நேற்று மதியம் அவ்வழியாக கால்நடைகளை மேய்த்தபடி சென்றவர்கள், கிணற்றில் பழனிச்சாமி கயிற்றை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடுவதை பார்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி பழனிச்சாமி பத்திரமாக மீட்கப்பட்டார்.

The post 60 அடி கிணற்றில் தவறி விழுந்து போராடிய முதியவர் 3 நாளுக்கு பின் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: