இந்நிலையில், நேற்றைய கூட்டத்துக்கு வந்த குத்தா, அவையில் நுழைந்த உடன் சபாநாயகர் சி.பி. ஜோஷியின் இருக்கைக்கு சென்று சிகப்பு நிற டைரியை காட்டி, அது குறித்து பேச அனுமதிக்கும்படி கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், சேம்பரில் வந்து தன்னை பார்க்கும்படி கூறினார். இதனிடையே, பாஜ எம்எல்ஏ. டைரி ஒன்றை காட்டியபடி கூச்சலிட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் தற்காலிகமாக சஸ்பென்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, குத்தா தன்னை தாக்க வந்ததாகவும் மைக்கை உடைத்ததாகவும் தாரிவால் தெரிவித்திருந்தார்.
The post ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர், எம்எல்ஏ. சஸ்பென்ட்: கூட்ட தொடரில் பங்கேற்க முடியாது appeared first on Dinakaran.