இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ”இந்த வகை திமிங்கலங்கள் சிறியதாக இருக்கும் போது வலையில் சிக்கிவிடும். ஆனால் இதை யாரும் சாப்பிட மாட்டார்கள். எனவே நாங்கள் மீண்டும் கடலில் விட்டுவிடுவோம். இது இறால்களை விரும்பி சாப்பிடும். இறால்கள் ஆழம் குறைவான கடல் பகுதிகளில் அதிகம் இருக்கும். எனவே தற்போது இந்த திமிங்கலங்கள் கடற்கரையையொட்டியுள்ள பகுதிக்கு வந்திருக்கிறது. இது மனிதர்களை சாப்பிடாது. எனவே உயிர் மீது எங்களுக்கு பயம் கிடையாது. ஆனால் படகுகளை சேதப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதால் கடலுக்கு போக தயக்கமாக இருக்கிறது. இவை, கரைக்கு நெருக்கமாக வரும்போது கரையில் ஒதுங்கி விடவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு ஒதுங்கினால் நிச்சயம் அது இறந்துவிடும்” என்றனர்.
The post மாமல்லபுரம் கடல் பகுதியில் உலாவும் திமிங்கலங்கள்: மீனவர்கள் அச்சம் appeared first on Dinakaran.