திலகர், ஆசாத் பிறந்தநாள் பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: லோகமான்ய பால கங்காதர திலகரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிடுகையில், பூரண சுயராஜ்ய கோரிக்கையுடன் அந்நிய ஆட்சியின் அடித்தளத்தை உலுக்கிய நாட்டின் அழியாத போராளி திலகரின் பிறந்தநாளில் அன்னாரை நான் தலை வணங்குகிறேன். அவரது தைரியம், போராட்டம் மற்றும் அர்ப்பணிப்பு பற்றிய கதை எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் என கூறியுள்ளார். அவரது இன்னொரு டிவிட்டில், தாய்நாட்டை பாதுகாக்க சந்திரசேகர் ஆசாத் செய்த தியாகம், நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

The post திலகர், ஆசாத் பிறந்தநாள் பிரதமர் மோடி புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: