இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழி ஐதராபாத்தை சேர்ந்த வள்ளி பவனி செட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மற்றும் இரு ஆண் நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக, மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜரானார். அப்போது, நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அவரை வரும் செப்டம்பர் 29ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
The post மாமல்லபுரம் அருகே கார் விபத்து வழக்கு நடிகை யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.