ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!!

ஸ்ரீ நகர்: ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சிந்தாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அவர்களோடு இந்திய ராணுவ சிறப்புப் படைகள், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் போலீஸ் படைகளும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது காவல் துறையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.நள்ளிரவு 11.30 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சண்டை இன்று காலை வரை நீடித்தது. இரவு முழுவதும் பாதுகாப்பு படையினரும் தீவிரவாதிகளை பிடிக்க பதில் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பெரும்பாலும் வெளிநாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்றும் அவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

 

The post ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.

Related Stories: