அவர் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெருந்துறை அருகே 200க்கும் மேற்பட்ட கும்பல் நாட்டு முயல்களை வேட்டையாட திட்டமிடுவது தெரிய வந்தது. அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, 63 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு வனத்துறையின் இந்த குற்ற தடுப்புச் சம்பவம் அப்பகுதியிலுள்ள மற்ற கிராமங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வனவிலங்கு பாதுகாப்புக்கு உதவியாக அமைந்தது.
The post வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு மையத்தால் நாட்டு முயல் வேட்டை தடுப்பு: அரசு தகவல் appeared first on Dinakaran.