பாம்பு, பல்லியுடன் போஸ் கொடுத்த பாஜ துணை முதல்வரின் மனைவி: நெட்டிசன்கள் கிண்டல்

மும்பை: பாம்பு, பல்லியுடன் போஸ் கொடுத்த மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் குறித்து நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.  மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் மனைவியும், வங்கியாளரும், சமூக ஆர்வலருமான அம்ருதா பட்னாவிஸ், அவ்வப்போது தொழில்முறை சார்ந்த விஷயங்கள் முதல் உடல்நலம் தொடர்பான பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார். இந்நிலையில் நேற்று தனது ஆதரவாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், இரண்டு பாம்புடன் இருக்கும் புகைபடங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த இரண்டு பாம்புகளும் அவரது இரு கரங்களிலும் சுற்றியுள்ளன.

அதேபோல் மற்றொரு புகைப்படத்தில் அவரது கையில் பல்லி அமர்ந்திருப்பது போல் உள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘மிகவும் ஆபத்தான, விஷத்தன்மை உடைய விலங்குகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு குறித்து ஒருவர் வெளியிட்ட பதிவில், ‘இதுதான் தற்போது மகாராஷ்டிரா அரசியல் சூழ்நிலையாக பார்க்கப்படுகிறது’ என்றும், மற்றொருவர், ‘விஷத்தன்மை உடைய இதுபோன்ற விலங்குகள் ஆபத்தானவை என்று தெரிந்தும், எதற்காக இந்த போஸ் கொடுக்கின்றீர்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

The post பாம்பு, பல்லியுடன் போஸ் கொடுத்த பாஜ துணை முதல்வரின் மனைவி: நெட்டிசன்கள் கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: