சென்னை: மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். மருத்துவ மாணவர்கள் மத்தியில் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பு நிலவியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.