இந்நிலையில், அமெரிக்க கடற்கடை மற்றும் காட்டுப்பள்ளியில் உள்ள எல் அன் டி இடையே கடந்த மாதம் கையெழுத்தான 5 மாஸ்டர் ஷிப்யார்ட் பழுதுபார்க்கும் ஒப்பந்தத்தின்படி காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள எல் அன் டி கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் பழுது பார்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கா கடற்படையின் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் யுஎஸ்என்எஸ் சால்வார் கப்பல் பழுதுபார்ப்பதற்காக காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு நேற்று வந்தது. கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த அமெரிக்க கப்பல் பழுதுபார்க்கப்படும். மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரும் காலங்களில் அமெரிக்க கப்பல்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு வரக்கூடும். மேலும் பிற வேலைகளுக்காகவும் அமெரிக்க கப்பல்கள் வரும் என தெரிகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள கப்பல் கட்டும் தளங்களை அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு பயன்படுத்துவதை அமெரிக்கா பார்க்கிறதா என்பது குறித்தும், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் மற்ற துறைமுகங்களிலும் அந்த துறையின் நிலையை பூர்த்தி செய்ய முடியும். வரும் காலங்களில் போர்க்கப்பல் பழுதுபார்க்கும் மையமாக காட்டுப்பள்ளி துறைமுகம் மாறும் என்றார். மேலும், சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஜூடித் ரவின் கூறுகையில், எம்எஸ்ஆர்ஏ என்பது அமெரிக்க கடற்படை மற்றும் தனியார் கப்பல் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே, அமெரிக்க கடற்படை கப்பல்களை பழுதுபார்ப்பதற்கு கப்பல் கட்டும் தளங்களுக்கு முன் அனுமதி வழங்க சட்டரீதியாக கட்டுப்பாடற்ற ஏற்பாடாகும்’ என்றார்.
The post போர்க்கப்பல் பழுதுபார்க்கும் மையமாக காட்டுப்பள்ளி துறைமுகம் மாறும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.