இதற்கிடையே பென்னலூர் ஊராட்சி பகுதியில் உள்ள ஏரி வரவு கால்வாயை ஆக்கிரமித்து, ஒரு தனியார் நிறுவன தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. மேலும், அந்த கால்வாயை உடைத்து, அதன்மேல் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்துள்ளனர். இதனால் மழைக் காலத்தின்போது ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற வழியின்றி, அப்பகுதி குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துவிடும் அபாயநிலை உள்ளது. இதுகுறித்து தனியார் நிறுவன தொழிற்சாலை நிர்வாகத்திடம் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் முறையிட்டும் செவிசாய்க்கவில்லை. மேலும், இப்பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், ஏரி வரவு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, இப்பிரச்னையில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு, நேரில் ஆய்வு செய்து, அந்த தனியார் நிறுவன தொழிற்சாலையின் ஏரி வரவு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாயை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பென்னலூர் கிராம மக்கள் கலெக்டருக்கு வலியுறுத்தல் appeared first on Dinakaran.