திருவாடானையில் சதுர்த்தி விழா

 

திருவாடானை, ஜூலை 8: திருவாடானையில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வட்டாட்சியர் அலுவலக வளாக அதிர்ஷ்ட கணபதிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. உலக சமாதானமும், நன்மையும் வேண்டி நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையில் மாங்கனி அலங்காரத்துடன் அதிர்ஷ்ட கணபதி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். இந்த சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டிற்கான ஏற்பாட்டினை வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 

The post திருவாடானையில் சதுர்த்தி விழா appeared first on Dinakaran.

Related Stories: