கஞ்சா கடத்தி வந்தவர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பத்தூர் ரயில்வே நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு ஒரு அடையாளம் தெரியாத நபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். பின்னர் போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து சோதனை செய்தனர். சோதனையில், அந்த நபர் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சாவை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரை விசாரித்ததில் திண்டுக்கல் மாவட்டம் கோனூர் பகுதியை சேர்ந்த நவநீதன் (23) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கொண்டுவந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர் மீது கஞ்சா வழக்கு பதிவுசெய்து, அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா கடத்தி வந்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: