மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் ஜூலை 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் கலவரம், பொதுசிவில் சட்டம், ஒடிசா ரயில் விபத்து, மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் உள்ளிட்ட பிரச்னைகள் எதிரொலிக்கக்கூடும் என்று தெரிகிறது. இதையடுத்து அனைத்து கட்சிகள் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்முதல்கட்டமாக ஜூலை 19ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அதற்கு முன்பு ஜூலை 17,18ம் தேதிகளில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பெங்களூருவில் கூடி அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளன. அப்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் நடந்து கொள்ளும் முறை குறித்தும், எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்தும் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

The post மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: