சென்னை: சென்னை ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 89 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்குன்றம் காவல் மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 14 பேர், ஆவடி காவல் மாவட்டத்தில் 29 பேர் கைது செய்துள்ளனர். வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 5 பேர், சரித்திர பதிவேடு வழக்குகளில் தொடர்புடைய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.