திருப்பதி தேவஸ்தான கோயில்களில் யுபிஐ வசதி

திருமலை: திருப்பதி தேவஸ்தான கோயில்களில் பக்தர்கள் பண பரிவர்த்தனைக்கு யுபிஐ வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இணை செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இருந்தபடி திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மம் கோயில் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார். இதில், அவர் பேசியதாவது:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் கோயில்கள் மற்றும் துணை கோயில்களில் பக்தர்கள் யுபிஐ பண பரிவர்த்தனை செய்ய உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதன் மூலம் கோயிலில் சேவை டிக்கெட், பிரசாதம், அகர்பத்தி, பஞ்சகவ்யா பொருட்கள், டைரிகள், காலண்டர்கள் வாங்கும் பக்தர்களின் வசதிக்காக போன் பே, யுபிஐ மூலம் கியூஆர் கோடு ஸ்கேனர், டெபிட் கார்டு(ஆன்லைன்) மூலம் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

The post திருப்பதி தேவஸ்தான கோயில்களில் யுபிஐ வசதி appeared first on Dinakaran.

Related Stories: