முதல்வர் கெலாட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வரவிருக்கும் நாட்களுக்கான நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வரின் லோகேஷ் சர்மா கூறுகையில், ‘முதல்வர் கெலாட்டின் உடல்நிலை நன்றாக உள்ளது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது’ என்றார். இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்ட பதிவில், ‘எனது வீட்டில் உள்ள எனது அறைக்கு செல்லும் போது, இரு கால்விரல்களும் இடறி கீழே விழுந்தேன். எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் பணிக்கு திரும்புவேன். எலும்பு முறிவு காரணமாக, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சில நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
The post வீட்டிற்குள் கால் இடறி கீழே விழுந்ததால் ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டுக்கு எலும்பு முறிவு appeared first on Dinakaran.