பழநியில் குடோன்களில் பதுக்கிய 500 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல் : 2 பேர் கைது

பழநி : பழநியில் குடோன்களில் பதுக்கிய 500 கிலோ குட்கா, புகையிலை ெபாருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி நகர் பகுதி பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை வகை பொருட்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து நேற்று பழநி டவுன் போலீசார், நகர் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள், குடோன்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் குடோன்களில் குட்கா, புகையிலை மறைத்து வைத்திருந்ததாக குபேரபட்டினம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் (48), பட்டத்து விநாயகர் கோயில் பகுதியை சேர்ந்த காளிமுத்து (62) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 500 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம்.

The post பழநியில் குடோன்களில் பதுக்கிய 500 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல் : 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: