அமெரிக்க அதிபராக இருந்த போது ஒபாமா எத்தனை முஸ்லிம் நாடுகளை தாக்கியுள்ளார் என்பதையும் சிந்திக்க வேண்டும். இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்வதால் இந்தியா மதச்சார்பற்ற தன்மையைக் கொண்டுள்ளது.
முஸ்லிம் நாடுகளில் கூட சமூகத்தின் 72 பிரிவுகள் இருக்காது என்பதை சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் மட்டுமே நீங்கள் இத்தனை பிரிவினரை பார்க்கலாம். மோடியைப் பற்றி எதிர்மறையான எண்ணத்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் உள்ள சில சக்திகளே காரணம். ஆனால் இந்தியா எத்தனை முஸ்லிம் நாடுகளை தாக்கியுள்ளது என்பதை மக்கள் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* காஷ்மீரில் விரைவில் தேர்தல்
காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று ராஜ்நாத்சிங் கூறினார். அவர் கூறும்போது,’ ஜனநாயக தேர்தல் நடைமுறைகள் விரைவில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்படும். 370வது பிரிவை நீக்கிய பிறகு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப போதுமான அவகாசம் கொடுக்கப்பட்டது. இப்போது மக்களின் எதிர்காலம் குறித்தும், சட்டப்பேரவையை மீண்டும் கொண்டுவருவது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும். இதற்கான கால நிர்ணயம் செய்ய இயலாது. ஆனால் நீண்டகாலமாக இப்படியே இருக்காது என்பதை நான் உங்களுக்கு நம்பிக்கையுடன் தெரிவிக்க முடியும்’ என்றார்.
The post எத்தனை முஸ்லிம் நாடுகளை தாக்கினார்? மோடியை குறை கூறும் முன் ஒபாமா சிந்திக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் கருத்து appeared first on Dinakaran.