திருப்பூர் அருகே அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்தது: நல்வாய்ப்பாக குழந்தைகள் உள்பட 57 பேர் காயமின்றி உயிர்தப்பினர்

திருப்பூர்: திருப்பூர் அருகே அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. செங்கோட்டையிலிருந்து திருப்பூர் நோக்கி 57 பயணிகளுடன் வந்த அரசு பேருந்தை ஓட்டுநர் சரவணன் என்பவர் இயக்கி வந்தார். திருப்பூர் கோவை பேருந்து நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பேருந்து புதுரோடு பகுதியில் சென்ற பொது ஜேசிபி வாகனம் ஒன்று குறுக்கே வந்தது.

அப்போது அதன் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் இடது புறம் பேருந்தை திருப்பிய போது பேருந்து கடைக்குள் புகுந்தது. கடையின் முன்பு யாரும் இல்லாததாலும், சமயோஜிதமாக ஓட்டுநர் பேருந்தை மெதுவாக இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 57 பேர் காயமின்றி உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார் பயணிகளை மீட்டு அனுப்பிவைத்தனர்.

The post திருப்பூர் அருகே அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்தது: நல்வாய்ப்பாக குழந்தைகள் உள்பட 57 பேர் காயமின்றி உயிர்தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: