லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மரியாதை

நாமக்கல்: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மறைந்த முன்னாள் தலைவர் செங்கோடன் பிறந்தினம் நேற்று நாமக்கல்லில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாமக்கல் பரமத்திரோட்டில் உள்ள அவரது சிலைக்கு, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வாங்கிலி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், லாரி சங்க செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன், துணை தலைவர் பாலசந்திரன், இணை செயலாளர் மயில்ஆனந்த், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் செந்தில், துணை தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் அம்மையப்பன், துணை செயலாளர் கவுசிகன், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி, உதவித்தலைவர் செல்வகுமார், இணை செயலாளர் பரமசிவம் மற்றும் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: