மேலும் பலரைக் காணவில்லை என்றும் கூறிய அதிகாரிகள், குறிப்பிட்ட படகில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதால் விபத்து நடந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 103 பேர் பலியாகினர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். எனவே பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
The post நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் ஏறியதால், பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 103 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.