இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஆறுமுகம் காய்கறி வெட்டும் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுசீலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆறுமுகம், வீட்டில் தனக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. என்னை ஒதுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது என்னை மனைவி கீழே தள்ளிவிட்டார். ஆத்திரமடைந்த நான் கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து விட்டேன் என தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
The post ‘எனக்கு யாருமே மரியாதை தரல…’மனைவி கழுத்தை அறுத்த கணவர் appeared first on Dinakaran.