இதையடுத்து இருவரும் அந்தரங்கப் படங்களை பகிர்ந்து கொண்டோம். இந்நிலையில், சிவாவுடன் வீடியோ காலில் பேசினேன். அப்போதுதான் அவரது உண்மையான தோற்றம் தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இன்ஸ்டாகிராமில் வேறு நபரின் புகைப்படத்தை அப்டேட் செய்து என்னை ஏமாற்றியது தெரிய வந்தது. அவரது தோற்றம் எனக்கு பிடிக்காததால், அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். இருப்பினும் அவர் எனக்கு தொடர்ந்து ஆபாசப் படங்களை அனுப்பி டார்ச்சர் செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜபாளையம் போலீசார் சென்னை சென்று சிவாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து ராஜபாளையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
The post இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படங்களை அனுப்பி 17 வயது சிறுமிக்கு டார்ச்சர்: சென்னை வாலிபர் கைது appeared first on Dinakaran.