தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தகவல் தலைமை ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு முதலில் தலைமை தகவல் ஆணையர் ஒருவர் மற்றும் 2 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் கடந்த 2008-ம் ஆண்டு தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை இரண்டில் இருந்து ஆறாக உயர்த்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் ஆணையர் பதவிகளும் நிரப்பப்பட்டுள்ளன. முன்னாள் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட 4 பேர் தகவல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிரியா குமார், திருமலைமுத்து, எம்.செல்வராஜ் ஆகியோர் மாநில தகவல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்! appeared first on Dinakaran.

Related Stories: