வருசநாடு கிராமத்தில் டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை

வருசநாடு ஜூன் 12: வருசநாடு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. வருசநாடு மற்றும் வைகை நகர், பவளநகர், தர்மராஜபுரம், அம்பேத்கர் நகர் பகுதிகளில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர். வருசநாடு பஸ் நிலையம் அருகில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவ, மாணவிகள் டாஸ்மார்க்கை கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இது சம்பந்தமாக பல முறை கிராமசபை கூட்டங்களில் கோரிக்கை ைவத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பிரச்ைனக்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வருசநாடு கிராமத்தில் டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: