அய்யம்பேட்டை அருகே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

 

தஞ்சாவூர். ஜூன் 11: அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே நடைபெற்ற ஊர்வலத்தை கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை சித்திரைச்செல்வி, உதவி ஆசிரியை சங்கீதா மற்றும் பள்ளி கல்வி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலம் கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் சென்றது. தமிழக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

The post அய்யம்பேட்டை அருகே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: