கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை திறப்பு

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் நாளை 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கோடை வெயில் சுட்டெரித்த காரணத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளி போனது. சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டு இருந்தது. கோடை விடுமுறை முடிந்து நாளை( திங்கட்கிழமை) தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தொடர்ந்து 14ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாட புத்தகங்கள் வழங்குவது சீருடைகள் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, பொதுமக்களின் நலன் கருதி 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: