கூடலூர், உப்படி, சேரம்பாடியில் 12ம் தேதி மின் தடை

 

ஊட்டி, ஜூன் 10: உப்பட்டி, சேரம்பாடி மற்றும் கூடலூர் துணை மின் நிலையங்களில் வரும் 12ம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உப்பட்டி, சேரம்பாடி மற்றும் கூடலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் வரும் 12ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நியைங்களை சேர்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

உப்பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட உப்பட்டி, பொன்னாணி, தேவாலா, பந்தலூர், அத்திக்குன்னா, கொளப்பள்ளி, எல்லாமாலா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, வுட் பிரேர் மற்றும் நம்பர் 3 டிவிசன் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் மின் விநியோகம் இருக்காது. மேலும், சேரம்பாடி துணை மின்நிலையத்திற்குட்பட்ட சேரம்பாடி டவுன், கன்னம்வயல், நாயக்கன்சோலை, கையுன்னி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரா, கக்குண்டி மற்றும் சோடாடி ஆகிய பகுதிகளிலும் வரும் 12ம் தேதி மின் விநியோகம் இருக்காது.

கூடலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1வது மைல், 2வது மைல், காந்திநகர், முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடான்துரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டயவயல், நெலாக்கோட்டை, கார்குடி மற்றும் தேவர்சோலை பகுதியில் 12ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கூடலூர், உப்படி, சேரம்பாடியில் 12ம் தேதி மின் தடை appeared first on Dinakaran.

Related Stories: