பரமக்குடி பெண்கள் பள்ளியில் ஆங்கில வழி பாடப்பிரிவுகள் துவக்கம்

 

பரமக்குடி, ஜூன் 9: பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளியாக உள்ளது. இந்த பள்ளியில் வருடத்திற்கு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, இந்தக் கல்வி ஆண்டு முதல் (2023-2024) மேல்நிலை முதலாமாண்டு ஆங்கில வழிக் கல்வியில் கணிதம் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுக்கான மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.

10ம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவிகள் சேர்ந்து பயன்பெறலாம். ஆங்கில வழியில் பயின்ற மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இந்த ஆங்கில வழிப் பாடப்பிரிவு தொடங்குவதற்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி அளித்துள்ளார் என பள்ளியின் தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார்.

The post பரமக்குடி பெண்கள் பள்ளியில் ஆங்கில வழி பாடப்பிரிவுகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: