சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி தர்மன் போட்டி

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் பதவிக்காலம் வருகிற செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அதிபர் ஹலிமா மே 29ம் தேதி அறிவித்து இருந்தார். இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்னம் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் ஆளும் பிஏபி கட்சியில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

The post சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி தர்மன் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: