தா.பழூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

 

தா.பழூர், ஜூன் 7: தா.பழூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.அரியலூர் மாவட்டம், தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் சிலால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்று சோதனை செய்ததில் சிலால் தெற்கு தெரு பழனிவேல் மகன் அழகுவேல் (44) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அழகுவேலை கைது செய்து அவரிடமிருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தா.பழூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: