பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 2,200 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: 2023ம் ஆண்டு பள்ளிகளுக்கான கோடைகால விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதால் ஜூன் 2ம் முதல் 4ம் தேதி வரையிலான (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) மூன்று நாட்களில் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருக்கும் 1,300 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The post பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: